9809809149
அருளாணைப்படி மாமரத்தடியில் வடக்கு பார்த்த சன்னதியாக அமைந்துள்ளது. மிகவும் அழகான மூர்த்தி, சௌபாக்கியங்களை வாரி, வழங்கி அருள் பாலித்து வருகிறார்.
ஸ்ரீ ஸ்வேதார்க்கம், ஸ்ரீ மஹா காகபுசுண்டர் முதல் சித்த பரம்பரையினரால், பூஜிக்கப்பட்ட வழியில் ஸ்ரீ ஸ்ரீ காரைச்சித்தரால் கொண்டுவந்து இங்கு பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளது. உடன் ராகு, கேது ஸ்வரூபமான நாகர், பிறகு சித்தரின் அருளாணைப்படி, ஸ்ரீ ஸ்வேதார்க்க ஜெய வீர ஆஞ்சனேய ஸ்வாமியும் பிரதிஷ்டிக்கப்பட்டு, நித்ய பூஜை, ஆராதனைகள் நடந்து வருகின்றன.
ஸ்ரீ ஆதி அகஸ்திய நாடியில் கூறப்பட்டுள்ள த்யான ஸ்லோகங்களின் அடிப்படையிலும், அளவு முறைகளும் கடைப்பிடித்து, ஸ்ரீ அகஸ்திய ஸ்ரீ லோபாமுத்ரா தேவி விக்ரஹம் அமைத்து, பாலப்ரதிஷ்டை செய்து பூஜித்துவர வேண்டுமென்றும், மறு உத்தரவு கிடைக்கும் வரை இந்நிலை தொடரட்டும் என்றும் உத்தரவாயிற்று. இவ்வாறு 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பூஜிக்கப்பட்ட பிறகு, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன், கோவில் எழுப்பி இவர்களை அங்கு பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று உத்தரவாயிற்று. அதன்படி எங்கும் காணக் கிடைக்கா அமைப்பில், ஸ்ரீ அகஸ்திய பகவானும், ஸ்ரீ லோபாமுத்ரா தேவியும் ஒரே பீடத்தில் நின்ற திருக் கோலத்தில் அமைத்து பிரதிஷ்டையும், கும்பாபிஷேகமும் நடைப்பெற்று, நித்திய பூஜைகளும் ஆராதனைகளும் நடந்து வருகின்றன. கடந்த 11.05.2014 அன்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடை பெற்றது.